சில வருடங்களுக்கு முன்பு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த புதுவசந்தம் படம் மாபெரும் வெற்றி, அதை பின்தொடந்து 4கதாநாயகர்கள் 1கதாநாயகியை வைத்து வரிசையாக பல மொக்கை படங்கள் வெளிவந்தன. அத்தனை படத்திலும் கதை என்று ஒன்று மட்டும் இல்லை. புது வசந்தம் ஏற்படுத்திய பாதிப்பில் 4கதாநாயகன் 1கதாநாயகி இருந்தால், படம் ஓடிவிடும் என்று நினைத்து வெளிவந்த அவை சூப்பர் பிளாப் படங்கள்.
அதற்கு பிறகு இப்போழுது ரேணிகுண்டா அண்டாவாக ஏற்படுத்திய பாதிப்பு, அடுத்த படம் போன வாரம் வெள்ளி அன்று வெளிவந்திருக்கிறது. படத்தின் கதையை மட்டும் கொஞ்சம் மாத்தியோசித்திருக்கிறார்கள். (ரேணிகுண்டாவை அப்படியே காப்பி அடித்திருக்குறார்கள், என்று சொல்லிவிட கூடாது இல்லையா. ஆனால் ஒரு விஷயம், இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தான் தொடங்கபட்டன, யார் யாரை காப்பி அடித்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.)
படத்தின் தலைப்பிலேயே இயக்குநர் தெளிவாக சொல்லிவிட்டார். மாத்தியோசிங்க என்று ஆனால் நான் தான் சுத்த மடையன், கொஞ்சம் மாத்தியோசித்திருந்தால் வேறு படத்திற்க்கு போயிருக்கலாம். நம் தலைவிதி மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி வெளியே வந்ததுதான் மிச்சம். இப்படி மரணஅடி வாங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் அட்சர சுத்தமாக தலைவலி.
படத்தின் கதை வேறொன்றுமில்லை ரேணிகுண்டா படத்தை பார்த்திருப்பவர்கள் அதை கொஞ்சம் மாற்றி ரசிகர்களை தியேட்டரைவிட்டு ஒடவைக்கும் அளவுக்கு மாத்தியோசித்திருக்கிறார்கள். இரண்டு படங்களின் கதையையும் ஒப்பிட்டால் நாடு தாங்காது என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன். படம் முழுவதும் கஷ்டப்பட்டு ஒடிகொண்டிருக்கும் 4நாயகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
டிஸ்கி : படம் பார்க்க செல்வதற்க்கு முன் நான் தான் மாத்தியோசிக்கவேயில்லைலைலை.
No comments:
Post a Comment